tamilnadu

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.14-நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகனபிரச்சார இயக்கம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எலச்சிபாளையம் ஒன்றியம் முழுவதும் இருசக்கர வாகன தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரம் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் துவங்கி கொண்ணையார், சக்கரம்பாளையம், கோக்கலை, பெரியமணலி, பழக்காரன்காடு, ஜேடர்பாளையம், வேப்பம்பட்டி, தொண்டிபட்டி, புள்ளாச்சிபட்டி, மாவுரெட்டிபட்டி, அக்லாம்ப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், ராயர் பாளையம், மோளிபள்ளி, நல்லிபாளையம், காந்தி ஆசிரம புதுப்பாளையம், செம்பாம்பாளையம், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் எலச்சிபாளையம் கட்சி ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி துவக்கி வைத்து பேசினார். இதில், கொமதேக மாவட்டத் தலைவர் பெரியசாமி, இளைஞர் அணி பொறுப்பாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கோமதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சுந்தரம், பி.சுரேஷ், கே.எஸ்.வெங்கடாசலம், எஸ்.சி.சக்திவேல், ஆர்.குப்புசாமி, ஆர்.ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;