நாமக்கல், அக். 20- நாமக்கல் நகராட்சி கடைவீதி மற்றும் சேலம் ரோடு சந்திப்பு பகுதிகளில் அரசி னால் அறிவுறுத்தப்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நகராட்சி கடைவீதி மற்றும் சேலம் ரோடு சந்திப்பு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், மருத்துவ மனைகள், உணவகங்களில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப் படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சக்தி கணேசன் ஆகி யோர் திங்களன்று திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.
இந்த ஆய்வுகளில் முகக்கவசம் அணி யாத 25 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கொரோனா நோய்த்தொற்று குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விதி களை கடைபிடிக்காத ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வுகளில் நாமக்கல் காவல் ஆய் வாளர் செல்வராஜ், நகராட்சி அலுவலர் கள், காவல்துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண் டனர்.