tamilnadu

img

நிலம் விற்ற பணம் எனது தோழர்களுக்காக...

நாமக்கல்:
நாமக்கல் அருகே நிலத்தை விற்று கிடைத்த ரூ.8 லட்சத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காகவும், முழுநேர ஊழியர்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் மூத்த தோழர் எஸ்.சரோஜா வழங்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் புதனன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. 

இதில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தியும், விவசாயிகளின் எழுச்சிமிகு போராட்ட கோரிக்கைகளை விளக்கியும் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் என்.பாண்டி ஆகியோர் உரையாற்றினர். இப்பேரவையில் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் ந.வேலுசாமி, கே.தங்கமணி, பி.ஜெயமணி, எஸ்.தமிழ்மணி, எஸ்.சுரேஷ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுஉறுப்பினராகவும் நீண்டகாலம் செயலாற்றி, தற்போது திருச்செங்கோட்டில் வசித்து வரும் மூத்த தோழர் எஸ்.சரோஜா (85) (இவரது கணவர் மறைந்த மூத்த தோழர் கமலகண்ணன்), தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அதன்மூலம் கிடைத்த மொத்த தொகையான ரூ.8 லட்சத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் நலன்களுக்காகவும், முழுநேர ஊழியர்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் பேரவைக் கூட்ட த்தில் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். தோழர் சரோஜாவுக்கு கட்சித் தலைவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்து பாராட்டு தெரிவித்தனர்.