tamilnadu

img

குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதி

நாமக்கல், ஜூன் 4-நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக  பணியாற்றி வருபவர் வடிவேல். நாமக்கல் நல்லிபாளையத்திலுள்ள அரசினர் பள்ளிக்கு வந்த இவர் தனது மகன் நிஷாந்த் சக்தி, மகள் ரீமா சக்தி ஆகியோருக்கு பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியையிடம் விண்ணப்பம் கொடுத் தார். அதனை ஏற்றுக் கொண்ட தலைமை ஆசிரியை ரீமாசக்தியை 8 ஆம் வகுப்பிலும், நிஷாந்த் சக்தியை 6 ஆம் வகுப்பிலும் சேர்த்துக் கொண்டார்.நீதிபதி வடிவேல் இதற்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் பணியாற்றியபோது அங்கும் அரசுப் பள்ளியிலேயே குழந்தைகளை படிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;