tamilnadu

img

சட்டத்திற்குப் புறம்பாக ஏரியில் இருந்து மண் அள்ளுவதா? வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்

நாமக்கல், ஆக. 25- குமாரமங்கலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஏரியில் இருந்து மண் அள் ளுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியம், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் வடக்கு பகுதியில் உள்ள ஏரி சுமார் 60 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.

இந்த ஏரி யில் குடிமராமத்துப் பணியின்போது வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பிர முகர்கள் சிலர் வண்டல் மண் அள்ளிய பிறகு ஜேசிபி போன்ற கனரக வாக னங்கள் மூலம் 20 அடி ஆழத்திற்கு தோண்டி நாள்தோறும் லாரிகளில் மண்ணை எடுத்து சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்து வருகின்றனர்.  

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமரமங்கலம் ஒன்றி யக்குழு உறுப்பினர் சி.சுந்தரம், ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் திருச் செங்கோடு வட்டாட்சியர் பாஸ்கரிடம் புகார் மனு  அளித்தனர். இம்மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், இனி மேல் அப்பகுதியில் ஏரி மண் அள்ள அனு மதி கிடையாது. ஆகவே யாரேனும் மண் எடுத்தால் அவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.