tamilnadu

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் விசாரணைக் குழுக்கள்

நாமக்கல், ஏப்.26-நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை புகாரைத் தொடர்ந்து ராசிபுரம் மற்றும் கொல்லிமலையில் பிறந்த குழந்தைகள் தொடர்பான விவரங்களை மருத்துவர்கள் தலைமையிலான 12 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. குழந்தைகள் விற்பனை தொடர்பான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவின் ஆடியோ வெளியானதையடுத்து காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் நாமக்கல், மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் இது குறித்து ஆய்வு செய்ய தலா ஒரு மருத்துவர் தலைமையிலான 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்தில் 10 குழுக்களும் கொல்லிமலையில் 2 குழுக்களும் ஆய் வுப் பணியில் ஈடுபட்டுள்ளன.ராசிபுரத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ள 10 குழுக்களில், ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், வட்டார சுகாதார மேற்பார் வையாளர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், பயிற்சி பெற்ற செவிலியர்கள், மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.இந்தக் குழுக்கள் ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4 ஆயிரத்து 800 குழந்தைககளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்த்து வருகிறது.அதேபோன்று கொல்லிமலையில் தலா ஒரு மருத்துவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், பயிற்சி பெற்ற செவிலியர் உள்ளிட்ட தலா 5 பேரைக் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கொல்லிமலையில் வீடுகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் அவ்வாறு பிறந்த குழந்தைகளின் விவரங்கள், முறைப்படி தத்துக் கொடுக் கப்பட்ட ஆவணங்கள், ஒரு குடும் பத்தில் 3க்கு மேல் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

;