tamilnadu

தமிழக அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 3- தமிழக அரசை கண்டித்து நாமக்கல் லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளார். தமிழக அரசு மேற்கொண் டுள்ள இந்த பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திரப் பிரசாத் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட பொருளாளர் ஆர்.குப்புசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

;