tamilnadu

img

மாணவர்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

நாமக்கல், அக்.24- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உணவு  குறித்த விழிப்புணர்வு போட்டிகள் புதனன்று  நாமக்கல்லில் நடைபெற்றது. உலக உணவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ,  மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்த தமிழக  அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து நாமக்கல் உணவு  பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.மு.ஊ. அருண் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி மற்றும் வினாடி- வினா போட்டிகள் நடத் தப்பட்டன.  மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி யர்களுக்கு சுகாதாரமான சத்தான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் துரித உணவு தவிர்த்தல், உணவு  கலப்படம் கண்டறிதல், சரிவிகித உணவு, உணவு  வீணாகாமல் தடுத்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.  குறைந்த உப்பு, கொழுப்பு, சர்க்கரை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.