tamilnadu

img

கு.சி.பாவுக்கு பிரியாவிடை!

நாமக்கல், ஜுன் 14 - முற்போக்கு தமிழ் இலக்கிய  மரபின் முன்னத்தி ஏர்களில் ஒருவ ரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் மார்க்சிய இயக்கத்தின் மூத்த தோழ ருமான கு.சின்னப்பபாரதி (88) திங்க ளன்று மாலை நாமக்கல் முல்லை நக ரில் உள்ள அவரது இல்லத்தில் கால மானார். அவரது இறுதி நிகழ்ச்சி செவ் வாயன்று பிற்பகல் நடைபெற்றது. மனைவி செல்லம்மாள் உடன் வசித்து வந்த தோழர் சின்னப்பபாரதி கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்த நிலையில் திங்கள் மாலை 6  மணி அளவில் காலமானார். இவ ருக்கு சி.பாரதி.சி.கல்பனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மறைந்த  சின்னப்ப பாரதியின் உடல்  மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி
தோழர் கு.சி.பா. உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தமுஎகச மாநிலத் தலைவருமான சு.வெங்க டேசன் எம்.பி., மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளருமான என்.பாண்டி, தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் ஆதவன்தீட்சண்யா, நாமக்கல் எம்பி.ஏ.கே.சின்ராஜ், முன் னாள் எம்.பி., அன்பழகன், எழுத்தா ளர் பெருமாள்முருகன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகி எழுத்தா ளர் த.ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள் ஈரோடு கே.துரை ராஜ், ப.மாரிமுத்து, சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, பி.தங்கவேல், இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் எ.டி.கண்ணன், சிபி எம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.ரங்கசாமி, எம். அசோகன், ந.வேலுசாமி, பி.ஜெய மணி, சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் சிவராஜ், சரவணன், தேன் மொழி மற்றும் தமுஎகசவின் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மறைந்த தோழர் கு.சி. பாவுக்கு நேரில்அஞ்சலிசெலுத்தினர்.  தோழர் குசிபா இறுதி நிகழ்ச்சி க்குப் பின் நடைபெற்ற இரங்கல் கூட்ட த்திற்கு தமுஎகச மாநில உதவி தலை வர் இரா.தெ.முத்து தலைமை தாங்கி னார்.  இதில், தமுஎகச பொதுச் செயலா ளர் ஆதவன் தீட்சண்யாபேசுகையில், குசிபாவின் எழுத்துக்கள், ஆற்றிய களப்பணிகள் நம்மோடு இருக்கிறது. தமுஎகச, செம்மலர் இலக்கிய இதழ், இந்தியன் லிட்ரேச் சர் ஆங்கில இதழ், சின்னப்ப பாரதி அறக்கட்டளை ஆகியவற்றை உரு வாக்கியவர், பல்வேறு உருவாக்கங் களுக்கு முன்னோடியாக பல அரிய பணிகளை செய்து முடித்திருக் கிறார். கடைசியாக தன் பெயரி லிருந்து அறக்கட்டளை நிதியைக்  கூட தமுஎகசவிடம் ஒப்படைத்துள் ளார். முற்போக்கு இலக்கியப் பங் களிப்பிற்காக வாழ்நாள் சாதனை யாளர் விருது கு.சி.பாவிற்கு வழங்க வேண்டும் என்றார்.

பாரம்பரியத்தின் அடையாளம்
எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் பேசுகையில், கு.சி.பாவின் எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்டவர் களில் நானும் ஒருவன். நாட்டுப்புற இலக்கியங்களை தொகுத்து அச்சிற்கு கொண்டு வருவதில் ந.வான மாமலையுடன் இணைந்து பணி யாற்றியவர். அவர்  கடைசியாக எழுதிய நாவல் பாலை நில ரோஜா. அதிகார வர்க்கத்திற் குள் ஊடுருவியிருக்கும் ஊழலை பற்றி எழுதியுள்ளார். ஒரே நேரத்தில் அமைப்பாளராகவும், களப் பணியாளராகவும், எழுத்தாளராக வும் இருந்தவர் கு.சிபா. தோழர் சீனி வாசராவ் தலைமையில் கோய முத்தூரில் தொடங்கிய நிலச்சீர் திருத்த இயக்கத்தில் பங்கெடுத்தவர். என்.சங்கரய்யா, ஆர்.கே.கண்ணன் போன்ற மகத்தான மார்க்சிய அறி ஞர்களுடன் நெருங்கி பழகியவர். ஒரு பாரம்பரியத்தின் அடையாளமாக வாழ்ந்தார். கடைசி வரையிலும் மார்க்சிய சிந்தனையாளராக, மார்க்சிய இயக்கத்தில் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த பேராளுமை. குசிபாவின் இழப்பு மார்க்சிய இயக்கத் திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார்.

மைல்கற்கள்
சு.வெங்கடேசன் எம்.பி., பேசுகை யில், உழைக்கும் மக்களின் வாழ்வை மிகக் காத்திரமாக பதிவு செய்தவர். விடுதலைக்கு பின்பு முதல் தலைமுறை எழுத்தாக குசிபாவின் எழுத்து அமைந்தது. நடுத்தர வர்க்க பின்னணியிலிருந்து எட்டிப்பார்த்து பச்சாதாபப்பட்டு எழு திக் கொண்டிருந்த எழுத்தைப் போலில்லாமல் நேரடியாக களத்திற் குப் போய் விவசாயிகளோடு, தொழி லாளிகளோடு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர்களது சுவாசக் காற்று படுகிற எல்லையில் நின்று வாழ்வை உண ர்ந்து எழுதுகிற எழுத்து முறையை கம்பீரமாக முன்வைத்து எழுதிய முதல் தலைமுறை எழுத்தாளர். அவ ரது எழுத்துக்கள் தமிழ் இலக்கிய த்தின் மிகப்பெரிய மைல் கற்கள்.

நாட்டுடமையாக்குக!
அவர் நம்மிடம் இல்லாவிட்டா லும் அவரது படைப்புகள் தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியாக, விளிம்பு நிலை மக்களின் மனசாட்சி யாக இருக்கும். நம்மை இயக்கும்,  உந்தித்தள்ளும். தமிழக அரசு அவ ரது படைப்புகளை விரைவாக நாட்டு டமையாக்க வேண்டும். அதேபோல மார்க்சிய இயக்கத்தோடு தன்னை பிணைத்துக் கொண்டு மார்க்சிய இயக்கத்தின் இலக்கிய முகமாகவும், பண்பாட்டுப் போராளியாகவும், களப்போராளியாகவும் பின்னிப் பிணைந்த ஆளுமை தோழர் கு.சி.பா. எங்களைப் போன்று இரண்டு, மூன்றாம் தலைமுறை எழுத்தாளர் களை எல்லாம் விரல் பிடித்து இழுத்து வந்து நாவல் எழுதுங்கள் என வழி காட்டிய மாபெரும் தலைவர். அவர் புகழ் என்றென்றும் நிலைக்கும் என்றார். குசிபா மறைவையொட்டி தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிகரம் ச.செந்தில்நாதன், ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தனர்.