tamilnadu

img

நாமக்கலில் ஊரக வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 21- சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொட்டணம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், பொட்டணம் ஊராட்சியில் கனி மம் மற்றும் சிறுகனிமம் நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்ட காத்திருப்போர் அறைக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு தங்கு பவர்களுக்குத் தேவையான கழிப்பறை, குளியளறை வச திகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தார்.

மேலும், கட்டிடம் பயன்பாடாக உள்ளதா என்று ஊராட்சித்தலைவர் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.  பொட்டணம் ஊராட்சியில் உள்ள அனைத்து குடியி ருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற் காக கட்டப்பட்ட 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி தற்போது தூய்மையாக பராமரிக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய் தார்.

மேலும், பொட்டணம் ஊராட்சியில் கனிமம் மற்றும் சிறுகனிமம் நிதி உள்ளிட்ட பல்வேறு  திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள், சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 இந்த ஆய்வுகளின்போது வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செ.புஷ்பராஜன், பி.ஜெயக்குமரன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மணிமாலா சின்னச்சாமி, பொட்டணம் ஊராட்சித்தலைவர் சு.பிரபாகரன்  உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.