tamilnadu

img

சாலை விபத்துகளால் உயிரிழப்பு ராசிபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

நாமக்கல், ஆக.8- ராசிபுரம் அருகே  உள்ள  முருங்கபட்டி அணைப் பாளையம் புறவழிச் சாலை யில் தொடர்ந்து விபத்து களால் உயிரிழப்புகள் ஏற் படுவதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே யுள்ள முருங்கபட்டி அணைப்பாளையம் புறவழிச் சாலையில் தொடர்ந்து விபத்துகள்  நடக்கிறது. இதனால் அதிகளவில் உயிரி ழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில், புதனன்று அணப்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சாலையை கடக்கும் போது  அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே பலியாகினார். இதை யடுத்து இப்பகுதி பொதுமக்கள் மற்றும்  மூதாட்டியின் உறவினர்கள் திடீரென புற வழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புறவழிச் சாலையில் வேகக் கட்டுப்பாடு தடுப்புகள் அமைக்கப்படுமென தெரிவித் தனர். இதன்பின் பொதுமக்களும், மூதாட்டி யின் உறவினர்களும் கலைந்து சென்றனர்.  இந்த சாலை மறியலால் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. 

;