tamilnadu

img

மேட்டூர், கீழக்கரையில் கால்வாய் புரனமைக்கும் பணி துவக்கம் அமைச்சர் பி.தங்கமணி அடிக்கல்

நாமக்கல், மார்ச் 15- பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட் சியில் மேட்டூர் கிழக்கு கரை கால் வாய் புனரமைக்கும் பணியினை ஞாயிறன்று அமைச்சர் பி.தங்க மணி துவக்கி வைத்தார். மேட்டூர் கால்வாய் மூலம் மேட் டூர் அணையிலிருந்து ஒவ்வொரு வருடமும் பாசன பகுதிகளுக்கு 9.605 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப் பட்டு வருகிறது. மேட்டூர் கிழக்கு கரை பிரதான கால்வாய் 64.40 கிமீ நீளமுடையது ஆகும்.  இதன் மூலம் 600 கனஅடி நீரை கொண்டு செல் லும் வகையில் அமைக்கப்பட்டு சேலம் மாவட்டம், மேட்டூர், எடப் பாடி, சங்ககிரி வட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் ஆகிய வட்டங்களுக்குட் பட்ட 27 ஆயிரம் ஏக்கர் நிலங்க ளுக்கு பாசன வசதி பெறுகிறது.  இந்த கால்வாய் வெட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட தால், மண் கரைகளால் ஆன கால் வாயின் பக்க பகுதிகளில் வழியாக தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. எனவே, மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் 31,400 மீட்டர் முதல் 45,300 மீட்டர் வரை தண்ணீர்  கசிவு உள்ள கரை பகுதிகள் கான் கிரீட் சுவர் எழுப்பி பலப்படுத்தப் பட உள்ளது.  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் கால் வாய் வலதுகரையில் ஆயிரம் மீட்டர் நீளத்திற்கும், இடதுகரை யில் 900 மீட்டர் நீளத்திற்கும் பக் கச்சுவர் கட்டப்பட உள்ளது.  கீழ் மட்ட சுரங்கப்பாதைக்கு மேல் கால்வாய் படுகை 200 மீட்டர் நீளத்திற்கும் கான்கிரீட் படுகை யாக மாற்றப்பட உள்ளது. இப்பணிக்கு ரூ.537 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தட் டாங்குட்டை ஊராட்சியில் நடை பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச் சிக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தலைமை வகித்தார். இந்நி கழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி புனர மைப்பு பணிகளை துவக்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிபா ளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணி, தட்டாங்குட்டை ஊராட்சி தலைவர் எஸ்.புஷ்பா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்,  இளநிலை பொறியாளர், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் உள்பட  அரசு அலுவலர் கள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.