நாமக்கல், மே 28 - நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் துறையின் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் பெற விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க. மெகாராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மூன்று ஆண்டு களாக சொட்டு நீர் பாசனத் திட்டம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப் பாசனம் தெளிப்பு, நீர் பாசனம் மற்றும் மழைத்துவான் ஆகியன சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் 1 ஹெக்டேருக்கு முறையே ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 133. ரூ. 23 ஆயிரத்து 274 மற்றும் ரூ. 36 ஆயிரத்து 176 மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் 1 ஹெக்டேருக்கு முறையே ரூ.84 ஆயிரத்து 850. ரூ. 17 ஆயிரத்து 456 மற்றும் ரூ.27 ஆயிரத்து 132 மானியத்திலும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்து 11 விவசாயிகளுக்கு 6 ஆயிரத்து 29 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ 2 ஆயிரத்து 983 லட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசனம் சிறப் பாக அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 4 ஆயிரத்து 950 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ 4 ஆயிரத்து 385 இலட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சொட்டு நீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கூடுதல் மானியம் வழங்கப் படுகிறது. இதன் வாயிலாக ஒரு ஹெக்டேர் கரும்பு பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் மானியத் துடன் கூடுதல் மானியமாக திறந்தவெளி கிணறுக்கு ஹெக் டேருக்கு ரூ. 38 ஆயிரத்து 235 -ம் ஆழ்துளை கிணறுக்கு ஹெக்டேருக்கு ரூ. 24 ஆயிரத்து 711 -ம் நிலப்பரப்பின் கீழிருக்கும் திறந்த வெளி கிணறுக்கு ஹெக்டேருக்கு ரூ. 49 ஆயிரத்து 758 -ம்; நிலப்பரப்பின் கீழிருக்கும் ஆழ்துளை கிணறுக்கு ஹெக்டேருக்கு ரூ. 36 ஆயிரத்து 234 -ம் கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை கரும்புப் பயிருக்கு கூடு தல் மானியத்தை பெறலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பாசனக் குழாய் அமைக்க ரூ. 10 ஆயிரம். தண்ணீர் தொட்டி அமைக்க ரூ. 40 ஆயிரம். மின்மோட்டார் வழங்குவதற்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் பாதுகாக்கப்பட உள்ள வட்டாரங்களான கொல்லி மலை மற்றும் பள்ளிபாளையம் பிர்க்காவில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ரூ. 25 ஆயிரம் வரை மானியம் வழங்கப் படுகிறது. இதுகுறித்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்கள் பயிருக்கு நுண்ணீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம். இவ்வாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள் ளார்.