நாமக்கல், அக்.26- இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள முன்னாள் படைவீரர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர்வித்துள்ளதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் 685 காலி பணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 காலிபணியிடங்கள், சிறைத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் 112 காலி பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை யில் தீயணைப்பாளர் 458 காலிபணியிடங்க என மொத்தம் 7800 காலிபணிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர் கள் மற்றும் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
எனவே, இப்பணியிடங்களை நிரப்பிட செப்.17 ஆம் தேதி 2017-க்கு பின்னர் விடுவிக்கப்பட்ட 45 வயது பூர்த்தி அடையாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அக்.26, 2020-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்து முன்னாள் படைவீரர் நலன், உதவி இயக்குநர் அலுவலகத் தில் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், விபரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.