tamilnadu

img

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு மாவட்ட ஆட்சியரிடம் மனு 

 நாமக்கல், ஜூலை 17-  ராசிபுரம் வட்டம், காவேரி ஊராட்சியில் தேசிய கிரா மப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் முறை கேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காவேரி ஊராட்சியில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு பணி யில் ஈடுபடும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, 2019 ஆம் ஆண் டில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இருபது நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. மேலும் சில முக்கிய நபர்களுக்கு மட்டும் தொடர்ந்து ஊராட்சியில் வேலை கொடுத்து வருகின்றனர். எங்களது அட்டையில் வேலை செய்யாமலேயே வேலை செய்ததாக பதிவு செய்து எங்கள் மூலமாகவே பணம் எடுத்துக் கொண்டனர். நாங்களும் அடுத்து நமக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் என்று பயந்து அவர்களுக்கு உடந்தையாக தவறு செய்து விட்டோம். இதுகுறித்து கடந்த ஜூன் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இவ்வூராட்சியில் திட்ட பணியாளராக உள்ள தமிழ்ச்செல்வி, சௌந்தரவல்லி, தவமணி, இளவரசி ஆகியோர் பணிநீக்கம் செய்யப் பட்டனர். எனவே முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் மூலம் கையாடல் செய் யப்பட்ட பணத்தை திருப்பி அரசுக்கு செலுத்தும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மனுவில் தெரிவித்துள்ளனர்.