tamilnadu

நாமக்கல்லில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - ஆட்சியர் தகவல்

நாமக்கல், செப். 20- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட் களில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது,

நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலமாக கடந்த செப். 1 ஆம் தேதி முதல் செப். 10 ஆம் தேதி வரை  நாமக் கல் மாவட்டம், மின்னாம்பள்ளி, வெப் படை, மோகனூர், புதுச்சத்திரம் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் 7 குழந்தை திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அக்குழந் தைகள் நலன் கருதி குழந்தைகள் காப்ப கங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

18 வயது நிறைவடையாத பெண்ணிற்கும், 21 வயது நிறைவடையாத ஆணிற்கும் திரும ணம் ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றமா கும். இதனை மீறுபவர்களுக்கு 2 வருடம் கடுஞ்சிறை தண்டணை மற்றும் ரூ.1 லட் சம் அபராதம் விதிக்கப்படும்.  

மேலும், குழந்தை திருமணம் பற்றி 181 மற்றும் 1098 என்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பல்வேறு வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை 181, 1098 என்ற இலவச எண் ணின் மூலமாகவோ அல்லது ஒருங்கி ணைந்த சேவை மைய நிர்வாகியை 96556 52896 என்ற எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.