நாடக விழாவில் படைப்பாளிகள் முழக்கம்
சென்னை, அக். 8- கலை அதிகாரத்திற்கு எதி ரான சொல்லாடல்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.கலை வடி வங்கள்அனைத்தையும் ஆயுத மாக மாற்றுவோம் என்று படைப்பாளிகள் சூளுரைத் துள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மும், சென்னை கேரள சமாஜ மும் இணைந்து ‘தென்னிந்திய மக்கள் நாடக விழா’வை அக். 2-6 ஆகிய தேதிகளில் சென்னை யில் நடத்தின. இந்த விழாவில் 5 மொழிகளைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட நாடகங்கள் நிகழ்த் தப்பட்டன. தினசரி முந்தைய நாள் நாடகங்கள் குறித்த கலந்துரையாடல், கருத்தரங் கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த விழாவின் நிறைவு விழா ஞாயிறன்று (அக்.6) நடைபெற்றது.
அத்தனையும் ஆயுதம்
நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமுஎகச கவுரவத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், “சோர்வளிக்கக்கூடிய அரசி யல் சூழலில் உற்சாகமளிக்கக் கூடிய வகையில் நாடகவிழா நடந்துள்ளது. ஆயிரம் வாசல் கள் கொண்ட தமுஎகச எனும் மாபெரும் மாளிகையில் எழுத் தாளர்கள், கலைஞர்கள், ஓவி யர்கள், நாட்டுப்புற கலைஞர் கள், ஒடுக்கப்பட்ட, மறைக்கப் பட்ட, மறக்கப்பட்ட கலை ஞர்கள் வந்து புழங்கும் இட மாக உள்ளது. படைப்பாளிகள் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டோம். 20ஆயிரம் உறுப்பினர்களும் ‘தேச விரோதி’களாக இருப்போம். சமூகத்தில் உள்ள அத்தனை கலை வடிவங்களையும் ஆயுத மாக மாற்றுவோம்” என்றார்.
படைப்பாளியின் கூருணர்ச்சி
“தென்னிந்தியா பண்பாட்டு செழுமையும், வளர்ச்சியடைந்த மொழியும், தனித்த வாழ் நிலையும் கொண்ட பகுதி என்று அம்பேத்கர் குறிப்பிட்ட தைப்போல, அதற்குரிய கலை வடிவங்களோடு நாடகவிழா நடந்தது. சமூக நடப்புகளை கவ னிக்கக் கூடிய கலைமனதால், ஒரு அசாதாரணமான சூழல் வரப்போவதை உணர முடியும். இது கலைஞன், படைப்பாளிக்கு உள்ள கூருணர்ச்சி. அதன டிப்படையிலேயே நாடகங்கள் அமைந்திருந்தன. இந்த விழா பேரனுபவத்தை கொடுத்துள் ளது” என்றார் தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா.
திரைப்படவிழா
மேலும் அவர் கூறுகையில், “நாடக விழாவையொட்டி தமு எகச-வின் 12குழுக்கள் மறு உருவாக்கம் பெற்றுள்ளன. இந்த நாடக விழா புதிய களத் திற்கும், காலத்திற்கும் நம்மை கொண்டு வந்துள்ளது. அடுத்த தாக மாவட்ட அளவிலும், அகில இந்திய நாடக விழாவை நடத்த வும் திட்டமிட வேண்டும். அதற் கான அரசியல் தேவை உள் ளது. 3வது தென்னிந்திய நாடக விழா 2021ல் நடைபெறும்” என்று குறிப்பிட்ட ஆதவன், “தமுஎகச நடத்தும் 6வது சர்வதேச திரைப்படவிழா அக். 16-20 ஆகிய தேதிகளில் திரு வண்ணாமலையில் நடைபெறு உள்ளது” என்ற தகவலையும் வெளியிட்டார்.
உற்சாகம், உத்வேகம்...
நாடக கலைஞரும், கவி ஞருமான முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமது வாழ்த்துரையில், “தெற்கிலிருந்துதான் எதுவும் தொடங்கும் என்று ஹோசிமின் கூறுவார். அதுபோல தென் னிந்திய நாடக விழா அமைந் துள்ளது. பிரபுக்களின் கீர்த்தி களை மட்டுமே பாடாமல், அன்றைக்கிருந்த முரண்பாடு களை, அழுக்குகளை அதற்கு ரிய கலைவடிவத்தோடு சொன் னதால், இன்றைக்கும் சாகாவ ரம் பெற்றவராக ஷேக்ஸ்பியர் இருக்கிறார். அவருக்கும் முன்னதாக தொல்காப்பிய காலம் தொட்டு பானர்களாக, விரலிகளாக, கூத்தர்களாக இருந்த பெருமை தமிழினத் திற்கு உண்டு” என்றார். “படைப்பாளிகள் வாழும் காலத்தின் சாட்சியாக, அறத் தோடு இருப்பார்களாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் அழுக்குகளை, அதிகாரத்திற்கு எதிரான சொல்லாடல்களை கலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இளந்தலை முறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கலைச் செழுமை மிக்க நாடகங்களை இந்த விழா தந்துள்ளது. நாடகம் நடத்து வதற்கென்று சென்னையில் தனித்த ஒரு அரங்கு இல்லை. அந்த கனவை நிறைவேற்றுவ தற்கான உந்துதலை நாடக விழா உருவாக்கியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பன்முகத்தன்மை...
“ஒரே மொழி, ஒரே நாடு என்பதெல்லாம் வியப்பாக இருக்கிறது. மொழி, மதம், இனம் ஒருமனிதனை இணைக் காது. ஐரோப்பா பல நாடு களைக் கொண்ட ஒரு கண்டம். இந்தியா பல நாடுகளைக் கொண்ட ஒரேநாடு. பல்வேறு மொழி, இனம், மதம் கொண்டது இந்தியா. வேற்றுமையில் ஒற்று மைதான் இந்தியாவின் சிறப்பு. அதை பாதுகாப்போம். அதற்கு கலை பயன்படும்” என்றார் நடிகர் ராஜேஷ். இந்நிகழ்வில் தயாரிப்பா ளர் ராம்குமார், மூத்த நாடக கலைஞர் பாரதிமணி, சிகரம் ச. செந்தில்நாதன், மொழி பெயர்ப்பாளர் வீ.பா. கணே சன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தஞ்சை தமிழ் பல்கலைக் கழக நாடகவியல் துறை தலைவர் பேரா. கோவிந்தசாமி, தமுஎகச துணைப்பொதுச் செயலாளர் எஸ். கருணா, செயற்குழு உறுப்பினர் சுந்தரவள்ளி, கேரள சமாஜம் தலைவர் பி.கே.என். பனிக்கர், செயலா ளர் பாலகிருஷ்ணன், விழாக் குழு தலைவர் ரோகிணி, செய லாளர் பிரளயன் உள்ளிட்டோர் பேசினர்.