tamilnadu

img

வேதாரணண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரணண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டஅகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. 
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மாநில அரசு அனைவருக்கும் 150 நாள் வேலை வழங்கி தினக் கூலி ரூ.281 வழங்க கோரி  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அலுவலக வாயிலில் போராட்டத்திற்கு காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா அனுமதி மறுத்தார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறை ஆய்வாளரை கண்டித்து  கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி முருகவேல் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு சூழல் நிலவியது.