tamilnadu

img

கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி தவிக்கும் தாடூர் பகத்சிங் நகர் மக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி தவிக்கும் தாடூர் பகத்சிங் நகர் மலைவாழ் மக்கள் 60 குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட  நக்சல் தடுப்பு பிரிவினர்  நிவாரண பொருட்களை வழங்கினார்கள். நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரி சுரேஷ் தலைமையில் இந்த உதவிகள்  வழங்கப்பட்டது.கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, மலைவாழ் மக்கள் சங்கம் ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் சேகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.