மோடியை விமர்சித்து நாடகம் போட்ட விவகாரம்...
பெங்களூரு, பிப்.6- குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக போடப்பட்ட நாட கத்தில், பிரதமர் நரேந்திர மோடி யை விமர்சித்ததாக கூறி, கர்நாடக பள்ளிக் குழந்தைகள் 85 பேரை, விசாரணை என்ற பெயரில் போலீ சார் தொடர் சித்ரவதைக்கு உள் ளாக்கி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பிதார் மாவட் டத்தில் ஷாகீன் பள்ளி உள்ளது. இங்கு ஜனவரி 21-ஆம் தேதி நடை பெற்ற ஆண்டுவிழாவின் போது, சிஏஏவுக்கு எதிராக நாடகம் போடப்பட்டுள்ளது. 4-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பங்கேற்று நடித்த இந்த நாடகத்தில், பிரதமர் மோடி யை விமர்சிக்கும் வசனங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக, ஷாகீன் பள்ளி நிர்வா கம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த போலீசார், உருது ஆசி ரியை பரீதா பேகம் மற்றும் நாடக உரையாடலை எழுதிய 6-ஆம் வகுப்பு குழந்தையின் தாயார் நஜ்புன்னிஷா ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஒன்றுமறியாத குழந் தைகளிடம் போலீசார் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி சித்ர வதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆரம்பத்தில் போலீஸ் சீருடையில் வந்து, குழந் தைகளிடம் விசாரணை நடத்திய தற்கு எதிர்ப்பு கிளம்பியது. இத னால் போலீசார் சாதாரண உடை க்கு மாறினார்களே தவிர தொந்த ரவை நிறுத்தவில்லை. கடந்த 9 நாட்களில் மட்டும் 5 முறை, போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று நாடகத்தில் நடித்த மற்றும் நடிக்காத 85 குழந்தைகளிடம் மீண் டும் மீண்டும் விசாரணை நடத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் நாடக உரையாடலில் குறிப்பிட்ட பகுதி யை எழுதிக் கொடுத்தது யார்? என திரும்பத் திரும்பக் கேட்டு குழந்தை களைத் தொந்தரவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை க்கு குழந்தைகள் உரிமை பாது காப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய முன்னாள் தலைவர் மாரிசுவாமி கூறுகை யில், ‘முதலில் இந்த வழக்கை சிற ப்புப் பிரிவுக்கு மாற்ற வேண்டும். ஏனெனில் இதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது’ என்று தெரி வித்துள்ளார். இந்த வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்ட நஜ்புன்னிஷா கணவனை இழந்தவர். தனது குழ ந்தையுடன் தனித்து வாழ்ந்து வந்த வர். தற்போது நஜ்புன்னிஷாவைக் கைது செய்துள்ளதால் அவரது 11 வயது குழந்தை தனித்து விடப் பட்டது. மற்றொரு ஆசிரியை ஒரு வரின் பராமரிப்பில், தனது தயா ரின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.