tamilnadu

img

10 மாநில இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி நாகாலாந்தில் அதிகப்படியாக 58.18 சதவிகிதம் வாக்குகள் பதிவு 

இடைத்தேர்தல் நடைபெறும் 10 மாநிலங்களில் காலை 11 மணி நிலவரப்படி நாகாலாந்து 58.18 சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்துள்ளது. மிக குறைந்த அளவான வாக்குகளாக 18.49 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 28 இடங்களும், குஜராத்தில் 8, உத்திரபிரதேசத்தில் 7 இடங்களும், ஒடிசா, நாகாலாந்து, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்டில் தலா 2 இடங்களும், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஹரியானாவில் தலா ஒரு இடம் என இன்று தேர்தல் நடைபெறுகிறது.

செவ்வாயன்று 10 மாநில இடைத்தேர்தலில் நாகாலாந்தில் அதிகமான வாக்கு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.   அம்மாநிலத்தின்,சட்டமன்ற தொகுதிகளான புங்ரோ கிஃபைர் 63.57 சதவிகிதம், தெற்கு அங்கமி 47.30 சதவிகிதம் வாக்குகள் காலை 11 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது. இதில் உத்திரபிரதேசத்தில் காவல் சதாத் பகுதியில் 23.41 சதவிகிதமும், கட்டம்பூர்  14.76 சதவிகிதமாக குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளது. நேரம் வித்தியாசமாக இருக்கும் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் நாகாலாந்து தவிர காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா தொற்று உள்ள வாக்காளர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தனித்தனியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் 26.54 ஆக இருக்கும்போது, ​​மாநிலத்தில் அதிக வாக்குப்பதிவு மன்ட்சூர் மாவட்டத்தில் (35.38 சதவிகிதம்), மிகக் குறைந்த எண்ணிக்கையில் காண்ட்வாவில் (18.37 சதவிகிதம்) பதிவாகியுள்ளது. ஒடிசாவில் வாக்களிப்பு சதவிகிதம் 26.24 ஆகவும், தெலுங்கானா 34.33 சதவிகிதமாகவும், ஜார்க்கண்ட் 30.37 சதவிகிதமாகவும், கர்நாடகா 17.36 சதவிகிதமாகவும், ஹரியானா, 19.50 சதவிகிதமாகவும், குஜராத் 22.41 சதவிகிதமாகவும், சத்தீஸ்கர் 21.50 சதவிகிதமாகவும் காலை 11 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது.
மேலும், இன்று 10 மாநிலங்களில் இடைத்தேர்தலுடன், பீகார் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. அங்கு, காலை 11 மணி வரை பீகாரில் 19.30 சதவிகித வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். முசாபர்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26.52 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவான் 15.38 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.