tamilnadu

img

பாலியல் குற்றவாளி காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு!

   பாலியல் குற்றவாளி காசிக்கு பல பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோயில் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி  கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர், பொறியியல் பட்டதாரி, மாணவி உள்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காசி மீது, போக்சோ, கந்து வட்டி, பாலியல் வன்கொடுமை என பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு இவரது தந்தையும் குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

 தற்போது பாலியல் குற்றவாளியான காசிக்கு நாகர்கோயில் விரைவு மகிளா நீதீமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ர்ப்பளித்துள்ளார்

 

;