tamilnadu

img

கொரோனா நிவாரணம் வழங்குக! குமரியில் 500 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.26- கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து, வருமானமிழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோ னா கால நிவாரணமாக மாதம்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்டத் தில் மக்கள் சந்திப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், வடசேரி, குதிரைபந்திவிளை, திருவிதாங்கோடு, திருவட்டார் உட்பட மாவட்டத்தில் 500 க்கும் மேற் பட்ட இடங்களில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகர்கோவில் தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், என்.உஷா பாசி, வட்டார செய லாளர் மோகன் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது உள் ளிட்டோர் பங்கேற்றனர்.