ஓய்வுபெற்ற தபால்காரர்களுக்கு ஜனவரி 1 ஆம்தேதி முதல்ஊதியமாற்றம் மற்றும் நிலுவைத்தொகையைஉடனே வழங்க வேண்டும், எழுத்தர்களுக்கு பயிற்சி காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியர் களுக்கு மருத்துவக் காப்பீடு உடனே அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயல் தலைவர் வேலப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜநாயகம், ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி எம்.அகமது உசேன் ஆகியோர் பேசினர். ஐயப்பன் நன்றி கூறினார்.