நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற் கரையை ஒட்டிய பகுதியில் பரந்து விரிந்துகிடக்கிறது இராஜாக்கமங்கலம் முதல் நிலை ஊராட்சி. இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையை தவிர நகர்புறத்துக்கான இதர வசதிகள் ஏதுமற்ற நிலையில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஊராட்சியாக மாறிய பகுதி இது. இங்கு சுனாமி ஏற் படுத்திய பாதிப்புகளின் வடுக்களை மக்களிடமிருந்து அகற்ற அரசுடன் இணைந்து ஐநாவின் IFAD உட்பட பல்வேறு அமைப்புகள் உதவியுள்ளன. அதன் பகுதியாக கட்டப்பட்ட பல கட்டடங்கள் பயனற்ற நிலையில் உள்ளன.
பயன்படாத சேவை மையம்
நாடு முழுவதும் அரசு சேவைகளில் கணிசமானவை மின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் 2016 பிப்ரவரி 27 அன்று தமிழக முதல்வர்ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி அலுவலக சேவை மையம் செயல்படவே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த பன்னாட்டு வேளாண்வளர்ச்சி நிதியகத்தின் (IFAD)சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்ட (PTSLP)அலுவலகம் இந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததாக பதிக்கப்பட் டுள்ள கல்வெட்டிலும் முகப்பு பலகையிலும்‘ஊராட்சி சேவை மையம்’ MGNREGS/ 2014-15 மதிப்பீடு ரூ.14.55 லட்சங்கள் எனபொறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இராஜாக்கமங்கலம் பேரூராட்சியாக இருந்தபோது அதன் கவுன்சிலராக செயல்பட்ட சொர்ணம்பிள்ளை கூறுகையில், இங்கு இ சேவை மையம் இல்லாததால் பக்கத்து பஞ்சாயத்துகளில் உள்ள மையங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஒரு பட்டா, சிட்டாகூட எடுக்க முடியாம என்ன வேளாண் வளர்ச்சித் திட்டம்? தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப பதிவியல் துறையின் பெயரால் இ சேவை மையம் என்கிற அறிவிப்புமட்டும் சேவைக் கட்டண விவரங்களுடன் அரசு கட்டடம் ஒன்றில் உள்ளது. ஆனால் அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. அந்த கட்டடத்தில் IFAD உதவியில் இயங்கும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சிசேவை மையத்தின் ஒரு பகுதியை இ சேவைமையமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்துவலியுறுத்தி வருகிறோம்.
பயன்பாட்டில் இல்லாத ரேசன் கடை
இதே வளாகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் அதற்கான கட்டடங்களும் கட்டி முடிக்கப்படாமல் வீணாகி வருகின்றன. சுனாமி திட்ட நிதியில் (2008-2009) கட்டப்பட்ட ரேசன் கடை பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த தெருவில் உள்ள ஒரு வாடகை கட்டடத்தில் ரேசன் கடைசெயல்படுகிறது. ஏ.வி.பெல்லார்மின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நூலகமும் தற்போது செயல்படவில்லை. சுனாமியின் பாதிப்பிலிருந்து இப்பகுதி மக்கள் மறுவாழ்வு பெறவழங்கப்பட்ட உதவிகள் வீணடிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.இதுகுறித்து பிடிஎஸ்எல்பி யின் கண் காணிப்பு அலுவலர் ஜெயசெல்வனிடம் கேட்டபோது, இ சேவை மையம் மகளிர்கூட்டமைப்பின் பொறுப்பில் நடத்தப்பட்டு வந்தது. அதற்கான கணினி, பிரிண்டர், பயோ மெட்ரிக் கருவி போன்றவை அவர்களிடம்தான் உள்ளன. அவற்றை கையாள்வதற்கான ஊழியர் இல்லாததால் தற்போதுபயன்பாட்டில் இல்லை என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜாக்க மங்கலம் ஒன்றிய செயலாளர் எஸ்.டி.ராஜ்குமார் கூறுகையில், பெரும் பாலான இடங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் இ சேவை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. அத்தகைய ஏற்பாடு இங்கே இல்லாததால் மக்கள் அவதிப்படும் நிலைஉள்ளது. அதிக அளவில் மக்கள் தொகைகொண்ட இராஜாக்கமங்கலம் ஊராட்சியில்தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இ சேவை மையம் முறையாக செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
சுடுகாட்டுக்கு பாதை தேவை
டிஎம்பி எதிரில் உள்ள அரசு புறம்போக் கில் உள்ள 8 அடி சாலை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையும் , பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலையும் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஊராட்சி மன்றதலைவருக்கும் சம்மந்தப்பட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கும் சிபிஎம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் இடத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுத்துள்ளனர். ஆக்கிரமிப்புக்கு இடமளிக்காமல் உடனடியாக சாலை அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன்.(ந.நி)