tamilnadu

தோழர் சிலுவை காலமானார்

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க (சிஐடியு)  தலைவர் தோழர் எஸ்.சிலுவை (78) காலமானார். நாகர்கோவில் நாகம்மாள் மில் தொழிலாளியாக பணியாற்றி அங்குள்ள தொழிலாளர்களையும், மாவட்டம் முழுவதும் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களையும் அணி திரட்டுவதில் முன்னணி பங்கு வகித்தவர் தோழர் சிலுவை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் நகர கமிட்டி உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். கட்சியின் மாவட்டக்குழு அலுவலக உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.மண்டைக்காடு அருகில் உள்ள அரசன்விளையில் மனைவி குளோரியுடன் வசித்து வந்த அவர் புதனன்று பிற்பகல் 4 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று (செப்.24)பிற்பகல் 4 மணிக்கு அரசன்விளையில் நடைபெறும். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

;