tamilnadu

முகநூலில் முதல்வர் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் மீது வழக்கு...

குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக முதல்வர் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றிய தக்கலை தீயணைப்பு நிலைய காவலர் மீது இரண்டு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெரால்ட் 43 வயதான இவர் தக்கலை தீ யணைப்பு துறைகாவல் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். கடந்தத 15-நாட்களுக்கு முன்கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து வீட்டு தனிமையில் இருக்கும் அவர் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பல பதிவுகளை பதிவேற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டஅவர் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தக் கலை தீயணைப்பு காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில் சனிக்கிழமை அவரது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை ஆபாசமாகவும் அதன் அருகே அமைச்சர் துரைமுருகன் நிற்பது போன்றும் சித்தரித்து பதிவேற்றியுள்ளார். இதை முகநூலில் பார்த்த தக்கலை திமுகவழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஜெகதேவ்,முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றி களங்கம் விளைவித்த தக்கலை தீயணைப்பு துறை ஊழியர் ஹெரால்ட் மீது வழக்கு பதிவு செய்துநடவடிக்கை எடுக்க வேண்டுமென தக்கலைகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஹெரால்ட் மீது 505ஐபிசி & 67ஐ டிஆக்ட் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அவரை தேடிவருகின்றனர்அரசு பணியில் இருக்கும் ஒருவரே தமிழகமுதல்வர் மற்றும் அமைச்சரின் படத்தை ஆபாசமாக பதிவேற்றி வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;