tamilnadu

img

கல்விக்கொள்கை எதிர்ப்பு கையெழுத்துகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

நாகர்கோவில், ஆக.11- புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆற்றூர் சந்திப்பில் நடைபெற்றது.  கல்வித்துறையில் தனியார் மயத்தை முழுவதுமாக புகுத்தி நாட்டில் உள்ள சாதாரண ஏழை எளிய மாண வர்களுக்கு கல்வியை மறுக்கும் வகை யில் புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறுதல் மற்றும் பிரச்சார இயக்கம் ஜூலை 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த பிரச்சார இயக்கத்தின் நிறைவு மற்றும் கையெழுத்து படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு திரு வட்டார் வட்டார செயலாளர் ஆர்.வில்சன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், வட்டாரக்குழு உறுப்பினர்கள் ஜோஸ் மனோகரன், கிளைமண்ட், மாவட்டக்குழு உறுப்பினர் சகாய ஆன்றணி, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் பேசினர்.  இதில் குலசேகரம் வட்டார செயலா ளர் விஸ்வம்பரன், தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.