tamilnadu

img

‘எங்களுக்கு வேண்டியது காந்தியின் இந்தியா’ குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு பேரணியின் முழக்கம்

தரங்கம்பாடி, மார்ச் 15- குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட வலியுறுத்தி நாகை மாவட்டம், பொறையார் அருகே திருக்களாச்சேரியில் அனைத்து  ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெள்ளியன்று மாலை ஆயப்பாடி வக்ப் நிர்வாக சபை தலைவர் ஏ.முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது.   எடுத்துக்கட்டி சாத்தனூர் கடை வீதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை திருக்களாச்சேரி வக்ப் நிர்வாக சபை தலைவர் எம்.முஹம்மது ரபீக் துவக்கி வைத்தார்.  எடுத்துக்கட்டி, பெரியகூத்தூர், திருக்க ளாச்சேரி வழியாக ஆயப்பாடி கடைவீதி வரை மதவெறிக்கெதிரான, ஒற்றுமையை வலியுறுத்தும் முழக்கங்களை பெண்கள், இளைஞர்கள் உற்சாகமாக எழுப்பிய வாறு சென்றனர்.  இந்தியாவிலேயே பிறந்தோம்,  இந்தியாவிலேயே வளர்ந்தோம், இந்தியா விலேயே வீழ்வோம் என்றும் “எங்களுக்கு புடிச்சது கோட்சேவின் இந்தியா அல்ல, எங்களுக்கு வேண்டியது காந்தியின் இந்தியா” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அதிகமாக ஏந்தி வந்த பெண்கள், தில்லியில் அமைதியாக போ ராடியவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட வர்களை கண்டித்தும் ஆவேசமாக முழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏந்தி பேரணியாக வந்தனர். ஆயப்பாடி கடைவீதியில் நிறைவடைந்த பேரணியில் சுமார் 200 அடிக்கும் மேல் நீளமான தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து இளைஞர் கள் வந்த காட்சி பொதுமக்களை வெகு வாய் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து திருக்களாச்சேரி யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜமா அத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் ஷாஹீல் ஹமீது ரஹ்மாணி நிஜாமி துவக்க வுரையாற்றினார். திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர், பெரிய கூத்தூர், பிலால் நகர் வக்ப் நிர்வாக சபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் அமீர். என்.ஏ.எம்.நூருல்லாஹ் தொகுப்புரை யாற்றினார். புதுச்சேரி மாநில கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆர்.கமலக் கண்ணன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஊடகவியலாளர் இரா.சிந்தன், பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ரவிச்சந்திரன், ராசையன், திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா. எம்.முருகன், முன்னாள் எம்.எல்.ஏ சித்திக், தமுமுக மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன், இந்திய தேசிய லீக் மாநில அமைப்பு செயலர் ஷாஜகான், மனித நேய மக்கள் கட்சி திருக்களாச்சேரி காசீம், திமுக சிறு பான்மை அணி மாவட்ட துணைச் செயலா ளர் முசாதிக், ஆயப்பாடி ஜமா அத் நிர்வாகி கள் ஜியாவூதீன், அமீன், சிராஜ்(பெரிய கூத்தூர்), ஹஜ்மல்(பிலால் நகர்) மற்றும் சுற்றுவட்டார உலமாக்கள்  ஜமாத்தார்கள் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் நிர்வாகிகள்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான், காங்கிரஸ் சிறுபான்மை மாவட்டத் தலைவர் ஹலில் ரஹ்மான் மற்றும் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

இடதுசாரி வெகுஜன அமைப்புகள் 
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி இடதுசாரி வெகு ஜன அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை யன்று புதுக்கோட்டை அன்னவாசலில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷ் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கே.சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.சி.ரெங்கசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்பாளர் ஏ.தேவராஜன் உள்ளிட்டோர் பேசினர்.