நாகப்பட்டினம், ஜூலை 18- மத்திய- மாநில அரசுகளின் நீர் மேலாண்மை இயக்கத் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் மேலாண்மைத் திட்ட மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளருமான சஞ்சீன் பட்ஜோஷி துவக்கி வைத்தார். நிகழ்வுக்கு ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நீர் மேலாண்மையைப் பெருக்கு தல், காடுகள், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், மழைநீரைச் சேமித்தல், பசுமைச் சூழ்நிலையை மேம்படுத்து தல் உள்ளிட்ட விழிப்புணர்வை மக்க ளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு, மரக் கன்றுகள் நடப்பட்டன. விழிப்பு ணர்வுப் பேரணியும் நடைபெற்றது.