tamilnadu

img

வி.தொ.ச. தலைவர் ஜி.ஸ்டாலின் கைதை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், செப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளருமான ஜி. ஸ்டாலினை திங்கட்கிழமை நள்ளிரவில் மயிலாடு துறைக் காவல் துறையினர் அடாவடித்தனமாகப் பழி வாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத் ததைக் கண்டித்தும், ஜி.ஸ்டாலினை உடனடியாக விடு தலை செய்திட வலியுறுத்தியும் நாகை மாவட்டத்தில் சிபிஎம் நாகை ஒன்றியம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழை யூர் ஒன்றியம், தலைஞாயிறு ஒன்றியம் ஆகிய வற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகை ஒன்றியம், சிக்கல் கடைத்தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். ஒன்றியச் செயலா ளர் பி.டி.பகு தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், செந்தில்குமார், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், வி.ச. ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல், வி.தொ.ச. ஒன்றியச் செய லாளர் எஸ்.என்.ஜீவாராமன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாரிமுத்து, ஏ.வடிவேல் உள் ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கீழ்வேளூர் ஒன்றியம், தேவூர் கடைத்தெருவில், ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.என்.அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், எஸ். மோகன் இங்கர்சால், டி.முருகையன், முத்தையன், சந்திரசேகர், கே.டி.முருகையன், வி.கணேசன், ஏ.மீரா உள்ளிட்டோர் உரையாற்றினர். கீழையூர் ஒன்றியம், மேலப்பிடாகையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம். ஒன்றியச் செய லாளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். தலைஞாயிறு ஒன்றியம், கொளப்பாடு கடைத் தெருவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிபி.எம். கிளைச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். சி.பி.எம். தலைஞாயிறு ஒன்றியச் செய லாளர் ஏ.வேணு, வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் அருள்தாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.