tamilnadu

img

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி  

சீர்காழி: நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் விவசாயி களுக்கு மண்புழு உரம் தயாரிப்பு குறித்துச் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்குக் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்துக் கூறுகையில், தற்போது கோடை காலம் நெருங்குவதால் மண்புழு தயாரிப்பதற்கு ஏற்ற தருணமாகும். அதற்கு வேளாண் துறை மானியம் வழங்கி வருகிறது. எனவே இயற்கை உரத்தைப் பாதுகாக்கும் வகையில் மண்புழு உரம் தயாரித்து வயலுக்கு இட்டு இயற்கை விவசாயத்தைப் பெருக்க வேண்டும் என்றார். வேளாண் அலுவலர் விவேக், உதவி அலுவலர்கள் வேதையராஜன், மகேஷ், பாலச்சந்திரன், சவுந்தர்ராஜன், இயற்கை முன்னோடி விவசாயிகள் பன்னீர், மணிமாறன் மற்றும் இயற்கை விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.