தரங்கம்பாடி அக்.20- நாகை மாவட்டம் பொறையார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்து நர்கள் தங்கும் ஓய்வறை கட்டிடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அவர் களின் நினைவாக இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறன்று பொறையாரில் நடைபெற்றது. அய்ய னார்கோவில் தெருவில் இருந்து, கொட் டும் மழையில் அனைத்து தொழிற் சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மவுன ஊர்வலமாக சென்று பணிமனை கட்டிடத்தை அடைந்தனர். அங்கு உயிரிழந்தவர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்த வர்களின் நினைவாக பணிமனை வளா கத்தில் 8 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் நிவேதா முரு கன், மாவட்ட துணைச் செயலாளர் சத்தி யேந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பாண்டியன், செம்பனார்கோவில் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், நகர செயலாளர் வெற்றி வேல், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் வீரமணி, அண்ணா தொழிற் சங்கத் தலைவர் கார்த்திக்கேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் துரைபார்த்தீபன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகை கோட்ட மேலாளர் செந்தில், பொறையாறு கிளை மேலாளர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.