tamilnadu

img

மக்களுக்கு அச்சுறுத்தல்: மிகப்பெரும் பள்ளங்களை தோண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஜூன் 29- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள மேமாத்தூரில் ஓஎன்ஜிசி நிறுவ னம் இராட்சத இயந்திரங்கள் மூலம் மிகப்பெ ரும் பள்ளங்களை தோண்டி வருவதை கண்டித்தும், பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று மேமாத்தூர் கெயில்  நிறுவன அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேமாத்தூரில், கீழ்மாத்தூர் செல்லும் சாலையோரத்தில் (மஞ்சளாற்று கரை) 45  அடி ஆழத்திற்கும் மேல் இராட்சத இயந்தி ரங்கள் மூலம் பிரம்மாண்ட பள்ளங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் தோண்டி வருகிறது. மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ள இப்பள்ளங்களால் அருகிலுள்ள குடி யிருப்புகள், தார்ச்சாலைகள் இடிந்து விழும்  அபாயம் உள்ளது. நாகை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கபட நாடக மாடுவதை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்ட க்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றி னர்.