tamilnadu

சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்

தஞ்சாவூர், பிப்.24- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாசிப்பு இயக்கத்திற்கு கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு மற்றும் மெரினா ஆறுமுகம், தனபால், முருக.சரவணன், ஏ.கோவிந்தசாமி, எஸ்.பாலகிருஷ்ணன், எல்ஐசி பக்கிரிசாமி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கல்யாணம், கட்டுமான சங்கம் கே.செந்தில், வாலிபர் சங்கம் குட்டி என்ற சு.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டை ஒன்றியம் வீரக்குறிச்சி- சுக்கிரன்பட்டியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்திற்கு கிளைச் செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் துவக்கி வைத்து பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர் பெஞ்சமின், வீரக்குறிச்சி கிளைச் செயலாளர் உலகநாதன் மற்றும் கண்ணன், அய்யப்பன், மாதர் சங்கம் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;