tamilnadu

பழையாறு துறைமுகத்தில் மண்டிக் கிடக்கும் முட்செடிகள்

சீர்காழி: சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மண்டிக்கிடக்கும் சீமைக்கரு வேல முட்செடிகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் மாவட்டத்திலேயே சிறந்த இரண்டாவது துறைமுகமா கும். இந்த துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் துறைமுகத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வகைப்படுத்துதல் தரம் பிரித்தல், விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு உலர வைத்தல் உள்ளிட்ட பணிகளில் சுமார் இரண்டா யிரம் பேர் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் கருவாடுகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப் பட்டு வருகிறது. எந்த நேரமும் துறைமுகத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்வளத்துறையின் சார்பில் அலுவலகமும் இங்கு உள்ளது.  ஆனால் துறைமுகம் முறையாக பராமரிக்கப்படாமல் மீன் ஏலக் கூடத்தைச் சுற்றிலும் சீமைக்கருவேல முட்செடிகள் மண்டிக் கிடக்கின்றன. இது அங்கு பணியில் உள்ளவர்களுக்கு  இடையூறாக உள்ளது. மீன் விற்பனைக் கூடத்தை கருவேல மரங்கள் சூழ்ந்து வளர்ந்துள்ளது. எனவே துறைமுகத்தில் இடையூறாக வளர்ந்துள்ள கருவேல முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது