tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

நாகப்பட்டினம், டிச.26- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி வார்டு-15 க்கு வழக்கறிஞர் ப.சுபாஷ்சந்திர போஸ், சிக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆர்.விமலாராஜா ஆகி யோர் சி.பி.எம். வேட்பாளர்க ளாகப் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வாக்குக் கேட்டுப் பொதுமக்களி டையே, நாகை ஒன்றியம், சிக்கல் கடைத்தெருவில் புதன்கிழமை அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பி னரும் விவசாயிகள் சங்க  மாநிலப் பொதுச் செயலாள ருமான பெ.சண்முகம் ஆகி யோர் பிரச்சாரம் செய்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.கே.ராஜேந்திரன் மற்றும் வி.வி. ராஜா, எஸ்.என். ஜீவாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;