tamilnadu

மாணவர் மன்றக் கூட்டம் 

 மயிலாடுதுறை, ஆக.1- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள மன்னம்  பந்தல் ஏ.வி.சி.கல்லூரி இயற்பியல் துறையின் நியூட்டன் பாண்டஸ் மாணவர் மன்றத்தின் சார்பில் வானமே எல்லை என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்து பேசினார். இயற்பியல் துறை தலைவர் கே.சிங்காரவேலன், பேராசி ரியர் டாக்டர் டி.பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  பாலசாகித்திய அகாதமி விருதாளர் ஆயிஷா நட ராஜன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் சுசித்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டாக்டர் இராம லிங்கம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.