tamilnadu

சிறப்பு கிராம சபா கூட்டம்  

கொள்ளிடம், பிப்.1- நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேளூர் சிவன் கோயில் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 2018-19 ஆம் ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் நடை பெற்ற பணி குறித்த சமூக தணிக்கை கிராமசபா கூட்டம் நடைபெற்றது. தற்காலிக தலைவர் ராமலிங்கம் தலைமை  வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா பேசினார். ஊராட்சி தலைவர் காமராஜ், துணைத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்திக் கொடுக்க கேட்டுக் கொள்வது. 200 பேருக்கு புதிதாக வேலை அடையாள அட்டைகளை பெற்றுத் தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;