நாகப்பட்டினம், பிப்.4- மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மற்றும் தேசியக் குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொ கைப் பதிவு ஆகியவற்றை எதிர்த்து, வேதாரணியம் ஒன்றியம், துளசியாப் பட்டினம் மற்றும் சில பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். வேதாரணியம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குமர வேல், வேதாரணியம் வட்டாரம் காங்கி ரஸ் தலைவர் எம்.ஆர்.ஜெகநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அ.பரிபாலன், எஸ்.வி.டி.அருள், வே. முருகையன், ஏ.வெற்றியழகன், பன்னீர் செல்வம், குமார், பசீர்யாஸ்மின், ஹாஜா அலாவுதீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.