tamilnadu

img

ஆம்பன் புயலால் கடல் சீற்றம் நாகை மீனவ கிராமத்தில் கடல்நீர் உட்புகுந்தது

தரங்கம்பாடி, மே 19- ஆம்பன் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 2-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் தரங்கம்பாடி கடலோரப் பகுதி மற்றும் மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப் படுகிறது.  சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் அலையின் வேகம் அதிகரித்து காணப்படுவதோடு கடல் நீர் கரையை கடந்து கிராமத் திற்குள் உட்புகுந்து வருகிறது. சந்திர பாடியில் 700க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். கடல் சீற்றம் காரணமாக கட லுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீன வர்கள் 450 பைபர் படகுகள், 50 கட்டுமரங்களை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். கடல்நீர் கரையை கடந்து ஊருக்குள் புகுவ தால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படகுகள் சேதமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  வருடந்தோறும் இயற்கை பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கரை அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், சந்திரபாடி ஊராட்சி பகுதியில் கருங் கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.