சீர்காழி: சீர்காழி அருகே பனங்காட்டாங்குடி கிராமத்திலிருந்து வடரெங்கம் செல்லும் சாலையை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டாங்குடி கிராமத்திலிருந்து வடரெங்கம் செல்லும் 3 கிலோ மீட்டர் தூர தார்ச்சாலை மேம்படுத்தப்பட்டு 5 வருடங்களுக்கும் மேலாகிறது. இந்நிலையில் இந்த சாலை மோச மடைந்துள்ளது. மழை நீர் தேங்கியே கிடப்பதால் சாலை மிகவும் பள்ளமாகியுள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி கீழே விழுந்து அவதிக்குள்ளாகின்றனர். சீர்காழி யிலிருந்து வடரெங்கம் வழியாக பனங்காட்டாங்குடி கிராமத்துக்கு வந்து செல்லும் அரசு டவுன் பேருந்து மிகவும் சிரமத்துடன் தடுமாறி வந்து செல்கிறது. இதனால் பயணிகள் உரிய நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே பாதுகாப்பற்ற குண்டும் குழியுமான ஆபத்தான இச்சாலையை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.