tamilnadu

கூட்டுமாங்குடி சாலையை மேம்படுத்தக் கோரிக்கை

சீர்காழி: சீர்காழி அருகே கூட்டுமாங்குடி கிராமத்துக்குச் செல்லும் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியைச் சேர்ந்த கூட்டு மாங்குடி கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆலாலசுந்தரம் மெயின் ரோட்டிலிருந்து கூட்டுமாங்குடிக்குச்செல்லும் ஒரு கிலோ மீட்டர் மண் சாலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கருங்கல் ஜல்லிகள் மட்டும் கொட்டப்பட்டது. ஆனால் தார் சாலையாக மாற்றவில்லை. காலப் போக்கில் கருங்கல் ஜல்லிகள் மண்ணுக்குள் புதைந்து தற்போது மண் சாலையாகவே உள்ளது. இந்த சாலையை மேம்படுத்த இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மழை பெய்தால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைகின்ற னர். எனவே கிராம மக்களின் நலன் கருதி கூட்டு மாங்குடி சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;