tamilnadu

புதைக்கப்பட்ட தெருவிளக்கு மின் கம்பங்கள் அகற்றம்

சீர்காழி, மார்ச் 4- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்கா ரன்சத்திரம் ஊராட்சியில், கொள்ளிடம், மாங்கணாம்பட்டு மற்றும் தைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த 1986 ஆம் ஆண்டு 30 அடி உயரத்திற்கு சோடியம் மின்விளக்கு பொறுத்தப்பட்ட இரும்பு மின்கம்பங்கள் புதைக்கப்பட்டிருந்தன.  இந்த மின்விளக்கு கம்பங்களின் அடிப்பகுதியில் துருப்பிடித்து முறிந்து விழும் நிலையில் இருந்தன.  இந்நிலையில் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதனன்று கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர்கள் முன்னிலையில் பழுதடைந்த 50 மின் கம்பங்களையும் அகற்றும் பணி நடைபெற்றது. அனைத்து மின்கம்பங்களும் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.