tamilnadu

img

புத்தூர் கல்லூரியில் ரத்ததான முகாம்

சீர்காழி: நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லெட்சுமி, முகாமைத் துவக்கி வைத்துப் பேசினார்.  சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவர் அருண் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் 50 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் வடிவேலன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.