சீர்காழி, மே 12- நாகை மாவட்டம் சீர்காழி அருகே மணலகரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். தினக்கூலி தொழிலாளர்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து போதிய வருவாய் இல்லாததால் வறுமையில் வாடி வருகின்றனர். இதனையறிந்த இப்பள்ளியின் தலைமையாசிரியரும், மனநல ஆலோசகருமான கீதாஞ்சலி தனது மகன் கிஷோருடன் வந்து தனிநபர் இடைவெளியுடன் இப்பள்ளியில் படிக்கும் 106 பழங்குடி இன மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் நிதியுதவி ஆகியவை வழங்கினார்.