சீர்காழி, ஜூலை 2- நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. 42 ஊராட்சிகளிலும் குடிமனைப் பட்டா, சொந்தமான வீடு இல்லாமல் ஏழை- எளிய மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். வீடு, மனை இல்லா தவர்கள் குடிமனைப் பட்டா கோரியும், அரசு கான்கிரீட் வீடு கோரியும் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் பல போராட்டங்கள் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் புத்தூர் ஊராட்சியில் ஒரே நப ருக்கு 2 திட்டங்களில் 2 வீடு கள் ஐஏஒய், பசுமை வீடு, வழங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் வீடு கட்டா மல் பயனாளி வீடு கட்டிய தாக பணம் பெற்றுள்ளனர். இதேபோன்று வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் முழு மை அடையாமல் சில வீடு களுக்கும், வீடு இல்லாமல் சில பயனாளிகளும் இந்த பகுதியில் பணம் பெற்றுள்ள னர். அதனை தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்டு அதற்கு சரி யான தகவல் கொடுக்கா ததால் மீண்டும் தமிழ்நாடு தக வல் ஆணையத்தில் மேல்மு றையீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் மூலம் விசாரணைக்கு உத்த ரவிட்டு விசாரணை அறி க்கையை 20 நாட்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். ஆனால் வருவாய் கோட்டா ட்சியரும், வட்டார வள ர்ச்சி அலுவலரும் திட்ட மிட்டு விசாரணை நடத்தா மல் காலம் தாழ்த்தி வரு கின்றனர். எனவே சம்பந்த ப்பட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவ டிக்கையும், வீடு இல்லாமல் இருக்கும் தகுதியான பயனா ளிகளுக்கு வீடும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.