tamilnadu

சைபர் கிரைம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் காவல் ஆய்வாளர் காயத்ரி பேச்சு

சீர்காழி, மார்ச் 17- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் மகளிர் தின விழிப்பு ணர்வு கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்துறை தலைவர் முனைவர் சசிக் குமார் தலைமை வகித்தார். ஆங்கில துறை பேராசிரியர் வினோத் வரவேற்றார். சீர்காழி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் காயத்ரி பேசுகையில், செல்பேசியை பயன்படுத் தும் போது நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும். சைபர் கிரைம் என்றால் என்ன என் பதை நன்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார். மகளிர் தின கருத்தியலில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன. துறைத் தலை வர்கள் சாந்தி, மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாண வர்கள் கலந்து கொண்டனர். மாணவி சவுமியா நன்றி கூறினார்.