tamilnadu

img

ஏ.வி.சி கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை, டிச.8- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தலில் உள்ள ஏ.வி.சி பொறியியல் கல்லூரியும் சிங்கப்பூரை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான யூனி ப்ரோ சாப்ட்வேர் பிரைவேட் லிட இடையே கிராமப்புற மாணவர்கள் நல னுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கல்லூரியில் பிரத்தேக ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டு பணிக்கான துறை சார்ந்த பயிற்சி மாண வர்களுக்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தினரால் அளிக்கப்படும் பயிற்சிகள் நிறைவடைந்த பின் அதில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து அந்நிறு வனத்தில் பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் கிராமப் புறங்களை சேர்ந்த ஏழை எளிய மற்றும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆற்றல், திறன் மிக்க மாணவர்கள் பலர் பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் கிளைகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை யூனி ப்ரோ குழு மங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான இக்பால் அப்துல் அலீம் ஏ.வி.சி கல்லூரி நிறுவனங்களின் செயலர் கி.கார்த்திகேயனிடம்  கல்லூரி முதல்வர் முனை வர் சி. சுந்தர்ராஜ், இயக்குனர் முனைவர் எம். செந்தில்முரு கன், துணை முதல்வர் முனைவர் எஸ். செல்வ முத்துக்கும ரன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் முனை வர் எஸ். விஜயராஜ், கணினித்துறை தலைவர் முனைவர் பத்மபிரியா ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். விப்ரோ நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.