tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு திரண்டெழுந்த இஸ்லாமியர்கள்

தரங்கம்பாடி, ஜன.11- நாகை மாவட்டம் பொறையாரில் குடியு ரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணி சனியன்று நடைபெற்றது.  பெரிய பள்ளிவாசலிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு தேசியக் கொ டிகளை ஏந்திக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து புதிய பேரு ந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டி த்தும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழு ப்பினர். குடியுரிமை சட்டத்தை கண்டித்து அடு த்தக் கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதா கவும் எச்சரித்துள்ளனர். அனைத்து ஜமாத்  கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப்போரா ட்டத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன், தமு முக மாநில துணைத் தலைவர் கோவை செய்யது, எழுத்தாளர் மதிமாறன் மற்றும் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் உரை யாற்றினர்.

;